சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை: நாளையும் ஆஜராக உத்தரவு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது. 

காலை மற்றும் பிற்பகல் என 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார். 

கடந்த 21-ஆம் தேதி சோனியா காந்தியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடைபெற்றது.

காலையில் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் தொடங்கிய விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளையும் அலமாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com