வங்கிகளில் இருக்கும் கோரப்படாத டெபாசிட்டுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் டெபாசிட்டுகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.39,264 கோடியாக இருந்த கோரப்படாத டெபாசிட் 2021-22 நிதியாண்டில் ரூ.48,262 கோடியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தமிழகம், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், பிகாா் மற்றும்
தெலங்கானா/ஆந்திரம் ஆகிய 8 மாநிலங்களில் கோரப்படாத டெபாசிட்டின் அளவு அதிக அளவில் உள்ளது. எனவே, இந்த எட்டு மாநிலங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.