கடந்த ஓர் ஆண்டில் எப்படி இருந்தது கேரளம்? புள்ளிவிவரம் இதோ

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன்பிறகான காலங்களும் அவ்வளவு சரியாக சென்றிருக்கவில்லை என்கிறது புள்ளி விவரம்.
கடந்த ஓர் ஆண்டில் எப்படி இருந்தது கேரளம்? புள்ளிவிவரம் இதோ
கடந்த ஓர் ஆண்டில் எப்படி இருந்தது கேரளம்? புள்ளிவிவரம் இதோ


கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன்பிறகான காலங்களும் அவ்வளவு சரியாக சென்றிருக்கவில்லை என்கிறது புள்ளி விவரம்.

அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜூலை வரை கேரளத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். இது நாட்டில் மிக அதிகபட்ச பலி என்கிறது புள்ளிவிவரம். இது நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, இந்த 2022ஆம் ஆண்டில் இதுவரை கேரளத்தில் கரோனாவுக்கு 22,843 உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிக உயிர் பலி என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, நாட்டிலேயே இந்த ஆண்டில் மட்டும் கரோனாவுக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் உயிர் பலி நடந்த மாநிலமாகவும் உள்ளது. மகாராஷ்டிரத்தில் இது 6,508 ஆக உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த ஆண்டில் கரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குள்தான் இருக்கிறது.

ஆனால், கரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்தே, இவ்வாறு கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகக் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளத்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வரை 11,721 கரோனா பலி நேரிட்டுள்ளது. அதுபோல, கடந்த ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 55,521 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com