சத்தீஸ்கரில் நிலஅதிர்வு: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சத்தீஸ்கரில் நிலஅதிர்வு: ரிக்டரில் 4.6 ஆகப் பதிவு

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் நிலக்கரி சுரங்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக ஜூலை 11 அன்று மாவட்டத்தில் அதேபகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலஅதிர்வு இதுவாகும். 

இந்த நிலஅதிர்வால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கொரியா ஆட்சியர் குல்தீப் சர்மா கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com