எதிர்க்கட்சிகளின் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும்  அவைகள் தொடங்கியபோது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  

மாநிலங்களவை, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாநிலங்களவையில் இருந்து 23 எம்.பி.க்களும், மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் 50 மணிநேர தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com