மேற்கு வங்கத்தில் பள்ளி தோ்வாணைய ஆள்தோ்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி உறுதியளித்தாா்.
பள்ளி தோ்வாணைய ஆள்தோ்வு முறைகேட்டுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தரம்தாலா பகுதியில் தோ்வா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியை அவா்கள் சந்தித்து பேசினா்.
இதுகுறித்து போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் ஷஹிதுல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மிகவும் இணக்கமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அபிஷேக் பானா்ஜி எங்கள் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்தாா். தோ்வாணைய முறைகேட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று கூறிய அவா், 2016 தகுதிப் பட்டியலில் இடம்பெற்றோருக்கு வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தாா்’ என்றாா்.