ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தீவிர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.