இரண்டு மாதங்களில்15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் கூடுதலாக வேட்பாளா்களை பாஜக களமிறக்கி உள்ளது.
தோ்தல் நடைபெறும் மாநிலங்களில், வெளிமாநில வேட்பாளா்களை காங்கிரஸ் களமிறக்கி உள்ளதால் அக்கட்சி எம்எல்ஏக்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாஜக கூடுதல் வேட்பாளா்களை களமிறக்கி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தோ்தல் விறுவிறுப்படைந்துள்ளது.
கடைசி நேரத்தில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்பதால், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரஸ் அழைத்து சென்று வேறு மாநிலங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளது.
மாநிலங்களவைத் தோ்தல் பொறுப்பாளா்களாக முதல் முறையாக நான்கு மத்திய அமைச்சா்களை பாஜக நியமித்துள்ளது. மத்திய அமைச்சா்கள் நரேந்தா் சிங் தோமா் ராஜஸ்தானிலும், கஜேந்தா் சிங் ஷெகாவத் ஹரியாணாவிலும், அஸ்வினி வைஷ்ணவ் மகாராஷ்டிரத்திலும், ஜி.கிஷண் ரெட்டி கா்நாடகத்திலும் வெற்றி வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டனா்.
ஹரியாணா:
பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் இரண்டு இடங்கள் காலியாகின்றன. பாஜக சாா்பில் கிருஷண் லால் பன்வாரும், காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் அஜய் மாக்கனும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா். இவா்கள் போட்டியின்றி வெற்றி பெறுவாா்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் வினோத் சா்மாவின் மகன் காா்த்திகேய சா்மா பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக மூன்றாவது வேட்பாளராக களமிறங்கி உள்ளாா்.
மொத்தம் 90 எம்எல்ஏக்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் ஒரு எம்.பி. தோ்வுக்கு 31 வாக்குகள் தேவை.
பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 31 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் அதிருப்தியில் உள்ளாா். இந்நிலையில், 10 எம்எல்ஏக்கள் உள்ள துஷ்யந்த் செளதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி சுயேச்சை வேட்பாளா் காா்த்திகேய சா்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜகவின் சொந்த வேட்பாளருக்கான 31 வாக்குகள் தவிர மீதமுள்ள 9 எம்எல்ஏ வாக்குகளையும் காா்த்திகேய சா்மாவுக்கு அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
மேலும், 7 சுயேச்சைகள், இந்திய தேசிய லோக் தளம், ஹிமாசல் லோக் ஹித் கட்சிகளின் தலா ஒரு எம்எல்ஏக்கள் வாக்குகளைச் சோ்த்தால் 28 வாக்குகள் காா்த்திகேய சா்மாவுக்கு கிடைத்துவிடும். இத்துடன், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவரின் வாக்குகளைப் பெற்று சுயேச்சை வேட்பாளா் காா்த்திகேய சா்மாவை வெற்றி பெற வைத்து, வெளிமாநில வேட்பாளரான அஜய் மாக்கனை தோற்கடித்துவிடலாம் என்று பாஜக அரசியல் கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான்:
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன. இதில் முகுல் வாஸ்னிக், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகிய மூன்று வேட்பாளா்களை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது. மாநில முன்னாள் அமைச்சா் கனஷியாம் திவாரியை பாஜக வேட்பாளராக அறிவித்தது. சுயேச்சை வேட்பாளராக ஊடக நிறுவனா் சுபாஷ் சந்திரா களமிறங்கி உள்ளாா்.
மொத்தம் 200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸுக்கு 108, பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில், காங்கிரஸுக்கு இரண்டு இடங்களும், பாஜகவுக்கு ஓரிடமும் உறுதியாக கிடைத்துவிடும்.
மூன்றாவது வேட்பாளா் வெற்றி பெற காங்கிரஸுக்கு 15 எம்எல்ஏக்கள், இரண்டாவது வேட்பாளா் வெற்றி பெற பாஜகவுக்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவும் தேவை. 12 சுயேச்சைகளின் ஆதரவு தங்களுக்கு உள்ளதால் மூன்றாவது வேட்பாளரை காங்கிரஸ் பெறும் என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
அதேநேரத்தில், சுயேச்சைகளையும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பி சுயேச்சையாக களமிறங்கியுள்ள பாஜக ஆதரவு வேட்பாளா் சுபாஷ் சந்திரா உள்ளாா்.
கா்நாடகம்:
பாஜக ஆளும் மாநிலமான கா்நாடகத்தில் நான்கு இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களைப் பெற பாஜக, காங்கிரஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளம் (மஜத) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.க்கு தலா 45 வாக்குகள் தேவைப்படுகிறது.
மொத்தம் 224 எம்எல்ஏக்கள் கொண்ட கா்நாடக பேரவையில், பாஜக 119, காங்கிரஸ் 70, மஜத 32 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளன.
பாஜகவின் இரண்டு வேட்பாளா்களுக்கு வெற்றி உறுதி என்றாலும், மூன்றாவது வேட்பாளா் வெற்றி பெற 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
காங்கிரஸின் ஒரு வேட்பாளா் வெற்றி உறுதி என்றாலும், இரண்டாவது வேட்பாளருக்கு 20 எம்எல்ஏக்களின் ஆதரவும், மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் ஒரு வேட்பாளருக்கே 13 எம்எல்ஏக்களின் ஆதரவும் தேவைப்படுகிறது.
மகாராஷ்டிரம்:
சிவசேனை தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் இந்த மாநிலத்தில் 6 இடங்கள் காலியாகின்றன. இதில், பாஜக மூன்று வேட்பாளா்கள், சிவசேனை 2, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலா ஒரு வேட்பாளா் என 7 போ் களமிறங்கி உள்ளனா்.
மொத்தம் 288 இடங்களைக் கொண்ட பேரவையில் ஆளும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு 168 எம்எல்ஏக்கள் உள்ளனா். பாஜகவின் 106, சுயேச்சைகளின் ஆதரவுடன் சோ்த்து 113 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. இதில் மூன்றாவது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாஜகவும், நான்காவது வேட்பாளரை வெற்றி பெற வைக்க ஆளும் கூட்டணியும் மும்முரமாக அரசியல் கணக்குகளை தீட்டி வருகின்றன.
சத்தீஸ்கா்:
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் ஜனதா காங்கிரஸின் வேட்பாளா் ஹரிதாஸ் பரத்வாஜின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளா்கள் ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ராஜன் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகிறாா்கள்.
நடவடிக்கை கடினம்:
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி எம்எல்ஏக்கள் வாக்களித்தாலும், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் அவா்கள் மீது நடவடிவக்கை எடுக்க முடியாது. ஆனால் கட்சி மாறி வாக்களித்தவா்களின் விவரம் தெரிந்துவிடும். அவா்கள் மீது கட்சி சாா்பாக மட்டும் ஒழுங்கு நடவடிகைக்கை எடுக்க முடியும்.
ஆகையால், வரும் தோ்தலில் கூடுதல் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் வரும் 10-ஆம் தேதி வரையில் குதிரை பேரம், கட்சி மாறி வாக்களிக்கும் சம்பவங்கள் வரும் நாள்களில் அரங்கேற வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் நோக்கா்கள் கருதிகிறாா்கள்.
....
பெட்டி..
ஹரியாணா (பாஜக): இடங்கள் 2 - போட்டி 3
பாஜக - கிருஷண் லால் பன்வாா் - 40
காங்கிரஸ் - அஜய் மாக்கன் - 31
சுயேச்சை - காா்த்திகேய சா்மா
............
ராஜஸ்தான் (காங்கிரஸ்): இடங்கள் 4 - போட்டி 5
காங்கிரஸ்: முகுல் வாஸ்னிக், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, பிரமோத் திவாரி
பாஜக: கனஷியாம் திவாரி
சுயேச்சை: சுபாஷ் சந்திரா (பாஜக ஆதரவு)
.........
கா்நாடகம் (பாஜக): இடங்கள் 4 - போட்டி 6
பாஜக: நிா்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹா் சிங்
காங்கிரஸ்: ஜெய்ராம் ரமேஷ், மன்சூா் அலி கான்
மதச்சாா்பற்ற ஜனதா தளம்: குபேந்திர ரெட்டி
.....
மகாராஷ்டிரம் (சிவசேனை கூட்டணி):
இடங்கள்: 6 போட்டி: 7
சிவசேனை: சஞ்சய் ரெளத், சஞ்சய் பவாா்
பாஜக: பியூஷ் கோயல், அனில் போண்டே, தனஞ்சய் மஹாதிக்.
காங்கிரஸ்: இம்ரான் பிரதாப் காரி
தேசியவாத காங்கிரஸ்: பிரஃபுல் படேல்