குவகாத்தி: இந்து திருமண சட்டத்தில், இரண்டாவது மனைவி என்ற வாதம் கிடையாது என்பதால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற அதிகாரம் இல்லை என்று குவகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு அரசு ஊழியரான பிரேன் டேகா என்பவர் உயிரிழந்தார். அவரது இரண்டாவது மனைவி பிரதிமா தேகா, குடும்ப ஓய்வூதியம் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை பிரெனின் முதல் மனைவி கோலபி தேகா எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிக்க.. வருங்கால கணவரைக் கைது செய்த 'பெண் சிங்கத்துக்கு' வந்த சோதனை?
இந்த வழக்கை விசாரித்த குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி, இந்த திருமணச் சட்டத்தில் இரண்டாவது மனைவி என்ற கருத்துக்கு இடமில்லை. அதே போல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இரண்டாவது திருமணம் என்பது குற்றமாகக் கருதப்படும். அதன் அடிப்படையில் விவகாரத்தும் கோரலாம். எனவே, இந்த வழக்கில் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இரண்டாவது மனைவியின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, முதல் மனைவி இருக்கும் போது, குடும்ப ஓய்வூதியம் பெற இரண்டாவது மனைவிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.