உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மக்களவை இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் மற்றும் அஸாம் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி?
இந்நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலே தங்கள் இலக்கு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இடைத் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.