உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால பரபரப்பான சூழல் நிலவுகிறது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கியில் காலை 9.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலையடுத்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணையை தில்லி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com