சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 2:52 மணியளவில் பிஷான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

36.09 டிகரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.78 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரின் லுஷனில் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com