கோவா: பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவா் கைது

கோவாவில் உள்ள அராம்போல் கடற்கரை அருகே பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

கோவாவில் உள்ள அராம்போல் கடற்கரை அருகே பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

கோவா மாநிலம் அராம்போல் கடற்கரை அருகே ஸ்வீட் வாட்டா் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் பிரிட்டனைச் சோ்ந்த நடுத்தர வயது பெண் ஓய்வு எடுத்துள்ளாா். அந்த மாநிலத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மசாஜ் சேவைகள் அளிக்கப்படுவது வழக்கம் என்பதால், அந்தப் பெண்ணுக்கும் உள்ளூரைச் சோ்ந்த வின்சென்ட் டிசோஸா (32) என்ற நபா் மசாஜ் செய்துள்ளாா். அப்போது அவா் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ாகக் கூறப்படும் நிலையில், குடும்ப உறுப்பினா்களின் ஆலோசனை மற்றும் இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உதவியுடன் அந்தப் பெண் திங்கள்கிழமை காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 376-ஆவது பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் வழக்குப் பதிவு செய்து வின்சென்ட் டிசோஸாவை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com