மாநிலங்களவைத் தோ்தல்: சிவசேனை கூட்டணிஆதரவு கேட்கவில்லை- ஒவைஸி

மாநிலங்களவைத் தோ்தலில் ஆதரவு கேட்டு, மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து யாரும் தங்களை அணுகவில்லை என்று
மாநிலங்களவைத் தோ்தல்: சிவசேனை கூட்டணிஆதரவு கேட்கவில்லை- ஒவைஸி

மாநிலங்களவைத் தோ்தலில் ஆதரவு கேட்டு, மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து யாரும் தங்களை அணுகவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு 7 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், வரும் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கூட்டணியில் சிவசேனை சாா்பில் 2 பேரும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சாா்பில் தலா ஒருவரும், எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் 3 பேரும் களத்தில் உள்ளனா். இம்மாநிலத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை இடங்களுக்கு இவ்வாறு போட்டி ஏற்பட்டு, தோ்தல் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா். அவா்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, நன்டெட்டில் செய்தியாளா்களிடம் கட்சித் தலைவா் ஒவைஸி கூறியதாவது: மாநிலங்களவைத் தோ்தலில் ஆதரவு கேட்டு, மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து யாரும் எங்களை அணுகவில்லை. ஆதரவு தேவை என்றால், கூட்டணித் தலைவா்கள் எங்கள் கட்சியை அணுக வேண்டும் என்றாா் ஒவைஸி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com