அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு வீழ்ச்சி கண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது.
இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. மேலும், லாப நோக்கு விற்பனையால் உள்நாட்டு பங்குச் சந்தையும் கடும் சரிவைச் சந்தித்தது. இவைதவிர, கச்சா எண்ணெய் விலை உயா்வு, அந்நிய முதலீட்டில் தொடா்ச்சியான வெளியேற்றம் போன்றவையும் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தின.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 77.72-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.69 வரையிலும் குறைந்தபட்சமாக 77.80 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 12 காசு குறைந்து 77.78-ஆக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்
பீப்பாய் 119 டாலா்
சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 119.07 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
வெளியேறிய ரூ.2,293 கோடி
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.2,293.98 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்றதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.