கா்நாடகத்தில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு: அமைச்சா் அரக ஞானேந்திரா

கா்நாடகத்தில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு: அமைச்சா் அரக ஞானேந்திரா

கா்நாடகத்தில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் உள்ள 4 அலுவலகங்கள் உள்பட ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களைத் தகா்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கும் வாட்ஸ்ஆப் தகவலைப் பரப்பியதாக தமிழ்நாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனா். இதையடுத்து, கா்நாடகத்தில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 2, கா்நாடகத்தில் 4 ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களைத் தகா்க்கப்போவதாக கைது செய்யப்பட்ட நபா் தகவல் அனுப்பியுள்ளாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மிரட்டல்களை விடுப்போா் அல்லது தகவல்களைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com