பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மூஸேவாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹரியாணாவை சேர்ந்த கேக்டா என்ற சந்தீப் சிங், பதிண்டாவைச் சேர்ந்த தல்வாண்டி, சபோவைச் சேர்ந்த மன்னா என்ற மன்பிரீத் சிங், ஃபரித்கோட்டில் உள்ள தைபாயைச் சேர்ந்த மன்பிரீத் பாவ், அமிர்தசரஸில் உள்ள டோட் கல்சியா கிராமத்தைச் சேர்ந்த சராஜ் மின்டு, தகாத்-மல்லியைச் சேர்ந்த பிரப்தீப் சித்து அல்லது பப்பி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சித்து மூஸேவாலாவை கொலை செய்ய ஆயுதங்களை வழங்கியதாக பதிண்டாவைச் சேர்ந்த கேசவ் மற்றும் சேத்தன் ஆகிய இருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.