அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கனமழையின்போது மின்னல் தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தது: பதன் மற்றும் சுரேந்தரநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் கனமழை பெய்தது. அப்போது, பலத்த சப்தத்துடன் இடிஇடித்து மின்னல் தாக்கியதில் மூன்று போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
அம்ரெலி, அகமதாபாத், சுரேந்தராநகா், போடட் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்ததில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.