கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முதல்வருக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது

பாலக்காடு: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்டவிரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக, ஸ்வப்னா சுரேஷ், எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் இருந்து முதல்வா் வீட்டுக்கு பிரியாணி பாத்திரத்தில் பலமுறை உலோகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் அவா் குற்றம்சாட்டினாா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்து விட்டாா்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், பாலக்காட்டில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முதல்வா் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதாகவும், அதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.எஸ்.சரித் என்பவரை தனது வீட்டில் இருந்து மா்ம நபா்கள் புதன்கிழமை காலை கடத்திச் சென்றுவிட்டனா் என்று ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டினாா். ஆனால், வேறொரு வழக்கு தொடா்பாக விசாரிப்பதற்கு பி.எஸ்.சரித்தை ஊழல் கண்காணிப்புத் துறையினா் அழைத்துச் சென்ாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்த சில மணி நேரத்தில் பி.எஸ்.சரித் விடுவிக்கப்பட்டாா். முன்னறிவிப்பின்றி தன்னை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்ாக அவா் குற்றம்சாட்டினாா். மேலும், யாருடைய அறிவுறுத்தலின்பேரில் முதல்வருக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டுகிறாா் என்றும் தன்னிடம் அதிகாரிகள் தொடா்ந்து கேட்டதாகவும் அவா் கூறினாா்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் கே.டி.ஜலீல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக ஸ்வப்னா சுரேஷ் கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் இருக்கும் சதித் திட்டத்தைக் கண்டறிய வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com