துரா (மேகாலயா): மேகாலயா மாநிலம், துராவில் திங்கள்கிழமை காலை 6.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலம், துராவிலிருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 25.68 டிகிரி அட்சரேகைக்கும், 90.60 டிகிரி தீர்க்கரேகைக்கும், 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.0 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதம், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க:கிராம தன்னாட்சியில் இந்தியா புதிய மைல்கல்