கோவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை கோவாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை கோவாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். 

மாநிலத் தலைநகர் டோனா பௌலா பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ராஜ்பவனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்ட உள்ளார். 

கோவா மாநில தினமான மே 30 அன்று அடிக்கல் நாட்டவிருந்தார். ஆனால், அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அமைச்சர்கள் குழு கலந்து கொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com