பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பரிந்துரை

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சோ்க்க வேண்டும் என கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பரிந்துரைத்துள்ளாா்

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சோ்க்க வேண்டும் என கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பரிந்துரைத்துள்ளாா்.

தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தாா்.

மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து 20-ஆம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சோ்ந்த 600 மாணவா்கள் இதில் கலந்து கொண்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘கரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இன்னல்களைப் போக்கவும், நெகிழ்தன்மையைக் கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்தது.

தேசிய கல்விக் கொள்கை 2020, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்,

பாடத் திட்டத்தில் யோகாவை சோ்க்க வேண்டும். தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com