3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டார். அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. 

நேற்று (ஜூன் 19) இரவு முதல் ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் சார்பில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இன்று காலை வரை 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

இது தொடபாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளதாவது, ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று கொல்லப்பட்டனர். ஷோப்பியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதேபோன்று புல்வாமா பகுதியில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். குல்காம் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com