மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவலை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கொல்லப்பட்ட நக்சல்கள் அவர்களின் பிரிவுக் குழு உறுப்பினர் நாகேஷ் என அடையாளம் காணப்பட்டனர். 

நக்சல்களிடம் இருந்து 303 ரைபிள் மற்றும் 12 துப்பாக்கிகளையும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும், நக்சலைட்களாக இருந்தாலும் சரி, வேறு எந்த குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com