அரசுப் பள்ளிகளில் நாள்தோறும் யோகா வகுப்புகளை எடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
மாணவர்களிக்கு இளம் பருவத்திலேயே யோகாவை அறிமுகம் செய்தால், எதிர்காலத்தில் வாழ்க்கை முழுவதும் யோகாவை அவர்கள் பின்பற்றுவார்கள்.
குழந்தைகளுக்கு யோகாவை கொண்டு சேர்ப்பது நமது இலக்கு. பள்ளிகள் மூலம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.