அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,
போர்ட் பிளேயரின் தென்மேற்கே 183 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவானது.
இன்று காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ ஆகும். இதன் நீளம் 91.61 ஆக பதிவானது என்று என்சிஎஸ் நிறுவனம் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.