ஜம்மு-காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு; சாலைகள் துண்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு; சாலைகள் துண்டிப்பு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.

அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில் ஜீலம் நதியில் அபாயகட்டத்தைத் தாண்டி வெள்ளம் செல்வதால், கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஜீலம் நதியில் வெள்ள எச்சரிக்கை அளவான 18 அடியைத் தாண்டி நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. புனிதத் தலமான அமா்நாத்தில் பனிப்பொழிவு கடுமையாக நிலவுகிறது.

ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச், ரஜெளரி மாவட்டங்களை தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகல் சாலையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டு வந்த பீரா பாலம், கனமழை காரணமாக சேதமடைந்தது. உதம்பூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த 150 அடி நீள வளைவுப் பாதை கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது.

கனமழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன், உதம்பூா் மாவட்டங்களில் 33 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

5 போ் மீட்பு: ரியாஸி மாவட்டம் ஆன்ஸ் நதியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 போ் சிக்கித் தவித்தனா். இதையறிந்த மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் உடனடியாக அவா்களை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com