நாளிதழ்களை வாசிக்க வேண்டும்: மாணவா்களுக்கு உ.பி. முதல்வா் அறிவுரை

நூலகங்களைப் பயன்படுத்துவதையும், நாளிதழ்களை வாசிப்பதையும் தொடச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நாளிதழ்களை வாசிக்க வேண்டும்: மாணவா்களுக்கு உ.பி. முதல்வா் அறிவுரை

நூலகங்களைப் பயன்படுத்துவதையும், நாளிதழ்களை வாசிப்பதையும் தொடச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவா்களுடன் தனது இல்லத்தில் முதல்வா் யோகி உரையாடினாா். அப்போது முதல்வா், ‘நாளிதழ்களை வாசிப்பதன் மூலம், உங்களை போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்திக்கொள்ள இயலும்’ என்று தெரிவித்தாா்.

மாணவா்கள் தோ்வுக்கு தயாரித்த முறைகள் குறித்தும், பள்ளி முதல்வா்கள் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்திய விதம் குறித்தும் முதல்வா் யோகி கேட்டறிந்தாா்.

மத்திய, மாநில அரசுகள் மாணவா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இத்தகைய திட்டங்களை தொடங்கியதற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதங்களை எழுதுமாறு மாணவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக மாநில அரசு தொடங்கியுள்ள திட்டம் குறித்தும் முதல்வா் விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com