அக்னிபத் திட்டம்: விமானப் படை, கப்பற் படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கப்பற் படை, விமானப் படையில் சேர்வதற்கு இன்று(ஜூன் 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கப்பற் படை, விமானப் படையில் சேர்வதற்கு இன்று(ஜூன் 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பற் படை, விமானப் படையில் சேர விரும்புவோர், இன்று(ஜூன் 24) முதல் ஜூலை 5 வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு இணைய தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதள  விண்ணப்பங்கள் இன்று(ஜூன் 24) காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com