கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியதை அடுத்து, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 858 ஆகப் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 683 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 2.36 ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.63 சதவீதமாகவும் உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: இரண்டுபட்டிருக்கும் அதிமுக: மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா
நிலைமையைத் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். பெங்களூரில் முகக்கவசம் அணிவதைக் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் 5,067 ஆக உயர்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,289 கரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.