குறுகிய தூர இலக்கைத் தாக்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் (VL-SRSAM) ரக ஏவுகணை இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலாசோா் மாவட்டம் சண்டிபூா் கடலில் இந்தியக் கடற்படையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) இணைந்து கப்பலிலிருந்து பாய்ந்து செங்குத்தாக வான் நோக்கி இலக்கைத் தாக்கும் வகையிலான உள்நாட்டு ஏவுகணையை பரிசோதித்தனர்.
சோதனையில் அந்த ஏவுகணை அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் பரிசோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.