குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும் மம்தா தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
இருவருக்கும் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முன்னதாக, திரௌபதி முர்முக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட் பிளஸ்’’(z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹவுக்கும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.