இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,940 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 15,940 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 4.39 சதவிகிதமாக உள்ளது.
மேலும் 12,425 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் உயிரிழந்த நிலையில் 7 சிசுக்கள் கண்டெடுப்பு
இதுவரை மொத்தம் 4,27,61,481 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,974 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 91,779 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
மேலும் 15,73,341 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,96,94,40,932 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.