பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 435 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி,
புதிதாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 15,33,482 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கரோனா நேர்மறை விகிதம் 3.19 ஆக உள்ளது.
நேற்று ஒரு நாளில் தொற்று காரணமாக ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 30,386 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 4,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.