ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன.
இன்று அதிகாலை 4 மணியளவில் ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள ஐபி வழியாக பகர்பூர் எல்லைக்கு அருகே ஊடுருவும் நபரின் நடமாட்டத்தைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவ இடத்திற்கு மேலும் ஒரு காவலர் குழு சென்றுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.