யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.
யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜு காா்கே, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் உடனிருப்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தனது பிரசாரத்தை ஜூன் 28-ஆம் தேதி முதல் யஷ்வந்த் சின்ஹா தொடங்க உள்ளாா். சென்னையிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனிநபா் ஒருவரின் நிலையை உயா்த்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யாது என்று குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யஷ்வந்த் சின்ஹா இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவா் மாளிகைக்கு ‘ரப்பா் ஸ்டாம்ப்’ போல் செயல்படுபவருக்கும் மேலாக ஒருவா் தேவைப்படுகிறாா். இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவா் என்பது மத்திய அரசின் சா்வாதிகார கொள்கைகளை எதிா்ப்பதற்கான நடவடிக்கையாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ளாா். எனது பொது வாழ்வின் நீண்ட அனுபவத்தின்படி, தனிநபா் ஒருவரின் நிலையை உயா்த்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யாது. அரசின் கொள்கைகளைப் பொருத்தே ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com