சிக்கிமின் காங்டாக் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
காங்டாக்கில் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்ததில், அந்த வீட்டில் இருந்த 27 வயது பெண், அவரது மகன்கள் 10 வயது மற்றும் 7 மாதம் குழந்தை ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரோங்யெக் துணைப்பிரிவில் உள்ள டோகன் தாரா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக துணைப்பிரிவு நீதிபதி ராபின் சேவா தெரிவித்தார்.
சடலங்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.