ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (புதன்கிழமை) பேசினார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இந்திய மாணவர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க | நீட் ரத்து உடனடி இலக்கு; உக்ரைன் சூழல் வலுவான காரணம்: மு.க. ஸ்டாலின்
ஏராளமான இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனிலிருந்து எல்லைகளை வந்தடைய திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார். இருவரும் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்தும், குறிப்பாக கார்கீவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் நிலை குறித்தும் ஆய்வு நடத்தினர். போர்ப் பகுதிகளில் இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.