போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து தெலங்கானா, ஆந்திரத்தைச் சேர்ந்த 160 மாணவர்கள் தாயகம் திரும்பினர்.
தொடர்ந்து எட்டாவது நாளாக உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி நேற்று தெலங்கானாவைச் சேர்ந்த 94 மாணவர்கள், ஆந்திரத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் தில்லி மற்றும் மும்பையில் தரையிறங்கினர்.
தில்லி மற்றும் மும்பையில் உள்ள அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரிகள் மாணவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல உதவி வருகின்றனர்.
பிப்ரவரி 26-ம் தேதி முதல் இதுவரை தெலங்கானாவைச் சேர்ந்த 354 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். மேலும், ஆந்திரத்தில் இருந்து மேலும் 80 மாணவர்கள் சனிக்கிழமை வர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.