புதுதில்லி: 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இளம் இந்தியா அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று மாண்டவியா சுட்டுரையில் தெரிவித்தார்.