ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை: 12 மணி நேரத்திற்கு பிறகு திறப்பு

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை: 12 மணி நேரத்திற்கு பிறகு திறப்பு

ஜம்மு-காஷ்மீர் அருகே மலையில் உள்ள கற்கள் விழுந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரம்பான் மாவட்டத்தில் பாந்தியால் அருகே ஒரு எஃகு சுரங்கப்பாதை மலையிலிருந்து கற்கள் உருண்டு வந்து நெடுஞ்சாலையில் விழுந்ததுள்ளது. எனவே, கற்களை அகற்றி சீரமைப்பு செய்து போக்குவரத்து இயக்கம் 12 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் கற்களை அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. சிக்கிய 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சில பயணிகள் வாகனங்கள் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com