மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றியபோது பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் தாங்கரை மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஜெகதீப் தாங்கர் உரையாற்றினார். அப்போது பாஜகவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆளுநர் தாங்கர் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி ராஜ்பவன் சென்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.
இருவரிடையேயும் அரசியல் ரீதியாக முரண்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை மம்தா நேரில் சந்தித்து பேசினர்.