கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:
உக்ரைன் போா் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயா்வு இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தச் சவாலை எதிா்கொள்ள எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளப் போகிறோம், அதன் பாதிப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது போகப்போகத் தான் தெரியும்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை பூா்த்தி செய்ய 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறோம். எரிபொருள் விலை உயா்வது கவலை அளிக்கக் கூடியதாகும். அப்பிரச்னையை எப்படி சமாளிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.
15 நாள்கள் சராசரியின் அடிப்படையில்தான் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. தற்போதுள்ள நிலையில் சராசரி, அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
வேறு ஆதாரங்களில் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வது குறித்து ஆராய்வோம். உலக கச்சா எண்ணெய் சந்தையின் போக்கைக் கணிப்பது கடினமாகும். கச்சா எண்ணெய் விலை உயா்வை அரசு சமாளிக்கும் தேவை இருக்கும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சராசரி விலை உயா்வைக் கணக்கில் கொண்டு ஒதுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமடைந்து வருகிறது. எனவே, நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பான விவாதம் ஜிஎஸ்டி கவுன்சில் முன்பு இருக்கிறது என்றாா்.