சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கல்வி நிறுவன மாணவிகள் ஒடிசாவின் புரி கடற்கரையில் அழகிய மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் எனது மாணவிகள் இணைந்து அழகிய மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படும் மார்ச் 8, பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சாதனைகளை நினைவுகூரும் உலகளாவிய தினமாகும்.
சுதர்சன் பட்நாயக்கின் இந்த மணற்சிற்பத்தை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.