தெலங்கானா: நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் சடலமாக மீட்பு

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் அரசு நடத்தும் சிங்கரேணி காலியரீஸ் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
coalpr043741
coalpr043741

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் அரசு நடத்தும் சிங்கரேணி காலியரீஸ் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

சுரங்கத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்ஸ் தொழிலாளி ஆகிய மூன்று பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை இரவு சுரங்கத்திற்குள் இடிபாடுகளுக்கு அடியில் மீட்கப்பட்டதாக சிங்கரேணி காலியரீஸ் நிறுவன லிமிடெட் வட்டாரங்கள் தெரிவித்தன. 

அட்ரியாலா லாங்வால் சுரங்கத் திட்டத்தில், துணைப் பணியின் போது சுரங்கத்தின் கூரை  இடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்சிக் கொண்டனர். பின்னர் அவர்களில் ஒரு ஓவர்மேன், ஒரு ஆப்ரேட்டர் மற்றும் ஒரு சுரங்கத் தொழிலாளி உள்பட நான்கு பேர் மீட்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com