இந்தியா
மக்களையும், வேட்பாளர்களையும் காங்கிரஸ் நம்பவில்லை: பாஜக
நாட்டு மக்களையும் தங்களது வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி விமர்சித்துள்ளார்.
நாட்டு மக்களையும் தங்களது வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. தங்களது வேட்பாளர்கள் மீதும் நாட்டு மக்கள் மீதும் காங்கிரஸ் நம்பிக்கை இழந்துள்ளது. இதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது புகார் கூறி வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய இயலுமா?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைய வசதி இல்லை. அவர்கள் மக்களை நம்பியிருந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதற்கான அவசியமே இருந்திருக்காது என்று கூறினார்.