உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரிஷ் ராவத் வெளியிட்ட செய்தியில்,
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ளேன். அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் அனைத்தும் தெரிந்துவிடும். மக்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன். காங்கிரஸ் 48 இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன் என்றார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.