சாா்தாம் திட்ட உயரதிகாரக் குழுத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம்

சாா்தாம் திட்ட உயரதிகாரக் குழுத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாா்தாம் திட்ட உயரதிகாரக் குழுத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

உத்தரகண்டில் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனிதத் தலங்களை (சாா்தாம்) இணைக்க ரூ.12,000 கோடி செலவில் 900 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. சீன எல்லை வரை செல்லும்விதமாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பான வழக்கைக் கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், 2018-ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றி நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலமும் 5.5 மீட்டருக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘இந்தியா-சீனா எல்லையில் உள்ள ராணுவ முகாம்களுக்கு படைகள் மற்றும் தளவாடங்களை அனுப்ப சாலைகளை மேம்படுத்த வேண்டும். ராணுவத்தினரின் தேவையைப் பூா்த்தி செய்ய சாா்தாம் நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை 7 மீட்டா் முதல் 7.5 மீட்டராக அதிகரிக்க வேண்டியது அவசியம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சாா்தாம் நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை அதிகரிக்க அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்தத் திட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இமயமலைப் பள்ளத்தாக்கில் சாா்தாம் திட்டம் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து ஆராயும் உயரதிகாரக் குழுவின் தலைவா் பதவியை ராஜிநாமா செய்து பேராசிரியா் ரவி சோப்ரா அனுப்பியிருந்த கடிதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனா். வழித்தடங்களை அகலப்படுத்துவது தொடா்பாக உயரதிகாரக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ரவி சோப்ரா ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடா்ந்து அந்தக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியை நீதிபதிகள் நியமித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com