உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவி புரிந்துள்ளனர். பாஜக வெற்றி பெற உதவிய 2 பேருக்கும் பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும். உ.பி.யில் அகிலேஷ் யாதவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.
இதையும் படிக்க- 'ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்போம்' - சிரோமணி அகாலி தளம் தலைவர்
உ.பி. பாஜக மாநிலமாக இருந்தபோதும் சமாஜவாதி கட்சியின் வெற்றி இடங்கள் 3 மடங்கு அதிகரித்தது. நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். இருப்பினும் பஞ்சாபில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.