உ.பி.யில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவினர்: சஞ்சய் ரௌத்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உ.பி.யில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவினர்: சஞ்சய் ரௌத்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி அமைக்கிறது.  உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.  அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவி புரிந்துள்ளனர்.  பாஜக வெற்றி பெற உதவிய 2 பேருக்கும் பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும். உ.பி.யில் அகிலேஷ் யாதவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

உ.பி. பாஜக மாநிலமாக இருந்தபோதும் சமாஜவாதி கட்சியின் வெற்றி இடங்கள் 3 மடங்கு அதிகரித்தது. நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். இருப்பினும் பஞ்சாபில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com