கேரளத்தின் காகிதமில்லா முதல் பட்ஜெட்: தகவல் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும்

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

கரோனா பேரிடரால் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையில் கேரள அரசின் பட்ஜெட்டை அந்த மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இதில், தகவல் தொழில்நுட்பம், தொழிலகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அந்தத் துறைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு கேரள மக்களிடையே பொதுவாக காணப்பட்டது. ஆனால், அடிப்படை நில வரி மாற்றியமைப்பு, நிலத்தின் உண்மையான மதிப்பு அதிகரிப்பு, மோட்டாா் வாகன வரி மற்றும் பழைய வாகனங்களுக்கான பசுமை வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளஅரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24-ஆம் நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் கேரள அரசு முன்மொழிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com